5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
நேற்று மாநில மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி விமானம் மூலமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று டெல்லியில் 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியது.
மேலும், அதற்கு முன்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய ஆனந்த் சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோரையும் பிற்பகல் 2 மற்றும் 3 மணியளவில் அடுத்தடுத்து சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து தற்போது மம்தா பானர்ஜி அவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது அரசியல் நிலவரங்கள் மற்றும் கொரோனா பாராவல் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…