மம்தா vs பாஜக: மேற்குவங்கத்தை பிடிக்க கங்குலியிடம் நிர்பந்தம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது உள்ள பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். இன்னும் ஒருசில மாதங்களில் மேற்கு வாங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல யுத்திகளை பாஜக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதில், சவுரவ் கங்குலியை முதல்வர் வேட்பாளராக களமிறக்கி மேற்கு வங்கத்தை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கங்குலி தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். இதனிடையே, சமீபத்தில் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கரை கங்குலி சந்தித்தது பேசியது பலருக்கும் பேசும்பொருளாக மாறியது. இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் தனது ட்விட்டர் பதிவில், பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி என்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம் என கூறிருந்தார்.

இதையடுத்து, ஜனவரி 2-ஆம் தேதி சவுரவ் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளன. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர். கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே கடும் மோதல் நிலவி வருவதால், கங்குலி மற்றும் தங்கர் சந்திப்பு தொடர்பான யுகங்கள் அதிகரித்துள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தல்களை அடுத்து, சவுரவ் கங்குலியின் அரசியல் ஈடுபாடு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மேற்கு வங்கத்திற்கான இரண்டு நாள் பயணத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா, ​​மேற்கு வங்கத்தில், பாஜக வங்காள மண்ணை சேர்ந்தவரை தான் முதல்வராக ஆக்கும் என அறிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாஜகவின் அழுத்தம் காரணமாகத்தான் கங்குலி மருத்துவமனையில் உள்ளாரா? அவருக்கு உண்மையாகவே உடல்நிலை கோளாரா? என்ற பல கேள்விகள் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. கங்குலி ஆளுநருக்கு இடையிலான சந்திப்பு, அமித்ஷா அறிவிப்பு என அரசியல் முக்கியத்துவம் பெற்று பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கான விடை கூடிய விரைவில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

8 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

10 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago