18 மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரே நேரத்தில் கடிதம் அனுப்பிய மம்தா பேனர்ஜி!

Published by
மணிகண்டன்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்து ரயில் சேவைகள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, 18 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்கள் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, இடம், உணவு, மருத்துவ வசதியை இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏற்படுத்தி தரவேண்டும் என முதலைமைச்சர் மம்தா பேனர்ஜி கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் உட்பட, கேரள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்கானா முதல்வர், கர்நாடக முதல்வர், ஒடிசா முதல்வர், மஹாராஷ்டிரா முதல்வர், ஹிமாச்சல் பிரதேஷ முதல்வர், பஞ்சாப் முதல்வர், உத்தரகாண்ட் முதல்வர், டெல்லி முதல்வர், ஜார்கண்ட் முதல்வர், ராஜஸ்தான் முதல்வர், பிஹார் முதல்வர், கோவா முதல்வர், குஜராத் முதல்வர், சட்டிஸ்கர், உத்திரபிரதேச முதல்வர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்கள் அனைவருக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

8 hours ago