கர்நாடகாவில் சமூகவலைத்தளம் மூலம் முத்தலாக் கொடுத்த நபர் கைது.
கர்நாடக மாநிலம், மங்களூர் மாவட்டத்தில் ஷிர்வா பகுதியில் வசித்து வருபவர் சலீம். இவருக்கும், ஸ்வப்னாஸ் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில், இவர் தனது குடும்பத்துடன் சவுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சவுதியில் இருந்து குழந்தையையும், மனைவியையும் விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பினார். இதனையடுத்து, இந்தியா வந்த இவர், சமூகவலைத்தளம் மூலம் மனைவிக்கு முத்தலாக் கூறியுள்ளார். மேலும், அவர் வேறு பெண்ணுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, ஸ்வப்னாஸ், சவுதியில் இருந்து இமேயில் மூலம், கர்ணாகாவில் உள்ள மங்களூர் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சலீம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…