ரூ.10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன் கைது.!

Published by
பாலா கலியமூர்த்தி

நகைக்கு ஆசைப்பட்டு கேரளாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விஷப்பாம்பு வாங்கி கடிக்க விட்டு மனைவியைக் கொன்றவர் கைது.

கேரளா பத்தனம்திட்டை மாவட்டத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் அவரது மனைவி உத்ரா இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த மார்ச் மாதம் உத்ராவை திடீரென பாம்பு கடித்திருந்தது. பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் அவரது தாய் வீட்டில் ஓய்வெடுத்தார். இதையடுத்து, கடந்த 6 ஆம் தேதி இரவு மனைவியை பார்ப்பதற்காக சூரஜ் அங்கு சென்றார். அன்று இரவு மனைவியின் வீட்டிலேயே தங்கினார்.

இதனைத்தொடர்ந்து மறுநாள் காலை உத்ரா நீண்ட நேரமாக தூங்கி கொண்டிருப்பதை கண்டு தயார் அவரை எழுப்ப முயன்றார். அப்போது அசைவின்றி இருந்த உத்ராவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பாம்பு கடித்து உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஆனால், உத்ராவின் இறப்பில் சந்தேகம்பட்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர். உத்ரா இறந்த பின்பு கணவர் சூரஜின் நடவடிக்கையில் சில மாற்றத்தை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். 

இதில், சூரஜ் மனைவியின் நகைக்காக அவர் மீது பாம்பை கடிக்க விட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதனிடையே சூரஜ், மனைவிக்கு தெரியாமல் பேங் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து செலவு செய்துள்ளார். இதனை உத்ரா, கணவரிடம் கேட்டதால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவியை கொலை செய்ய சூரஜ் திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.10,000 கொடுத்து மீண்டும் ஒரு பாம்பை விலைக்கு வாங்கி, உத்ராவை பார்க்க போகும்போது ஒரு பையில் பாம்பையும் எடுத்து சென்றுள்ளார்.

உத்ரா தூங்கிய பின்பு அவர் மீது பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சூரஜ் மற்றும் பாம்பு விற்பனை செய்தவரும் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

2 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

3 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

3 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

4 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

4 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

6 hours ago