திடீரென நீக்கப்பட்ட அமைச்சர்கள்! புதிதாய் 5 அமைச்சர்களை நியமித்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்

Published by
Surya

மணிப்பூரில் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் 5 பேரை அம்மாநில முதல்வர் நியமித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அமைச்சரவையில் இருந்த 3 அமைச்சர்கள் திடீரென அம்மாநில முதல்வர், அமைச்சர் பதிவியில் இருந்து நீக்கினார். இது மணிப்பூர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீக்கப்பட்ட அமைச்சர்கள்:

அதன்படி வேளாண், கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் வி.ஹங்கலியன், சமூகநலன் மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சர் நெம்ச்சா கிப்கென் மற்றம் கல்வி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ராதேஷ்யம் சிங் ஆகிய அமைச்சர்களை அம்மாநில முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அமைச்சர்களை பரிந்துரைக்கவுள்ளதாகம் செய்திகள் வெளியானது. அதன்படி முதல்வர் பைரன் சிங் அமைச்சர்கள் பதவிக்கு 5 பேரை நியமித்துள்ளார்.

புதிய அமைச்சர்கள்:

  • அதன்படி எஸ்.ராஜன், கல்வி, மீன்வளம் மற்றும் கட்டளை பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • நுகர்வோர் , உணவு மற்றும் பொது விநியோகம், சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் பொறுப்பை சத்தியபிரதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பழங்குடியினர் விவகாரங்கள், மலைகள், போக்குவரத்து மற்றும் பொது நிர்வாகத் துறை வுங்சால்ஜின் வால்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • வேளாண்மை, கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் சுற்றுலா துறையின் அமைச்சராக ஓ – லுக்கோய் சிங் நியமிக்கப்பட்டார்.
  • சமூக நலன், ஒத்துழைப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றுக்கு ஒக்ரம் ஹென்றி சிங் நியமிக்கப்பட்டார்.

எஞ்சிய பதவிகள்:

வீடு, பணியாளர்கள், திட்டமிடல், வருவாய் மற்றும் வேறு எந்தத் துறைக்கும் ஒதுக்கப்படாத அமைச்சர்களின் பதவியை முதலமைச்சர் தொடர்ந்து வகிப்பார் என தலைமைச் செயலாளர் ராஜேஷ் குமார் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தலைமையில்:

பதவி வகிக்கப்பட்ட  புதிய அமைச்சர்கள் அனைவரும் மணிப்பூர் ஆளுநரான நஜ்மா ஹெப்துல்லாவை ராஜ் பவனில் சந்தித்து, அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Published by
Surya

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

7 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

7 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

7 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

8 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

8 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

11 hours ago