Article 355 imposed in Manipur. [Image Source : PTI]
மணிப்பூரில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக இந்திய ராணுவம் தகவல்.
மணிப்பூர் மாநிலத்தில் மோரே கிராமத்தில் குக்கி, மைத்தேயி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இரு இன குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கினார்.
கலவரத்தை அடக்கும் நோக்கில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அளிக்கப்பட்டு, காவல்துறை, ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மணிப்பூரில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இரு இன குழுக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை நடந்த பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும், வன்முறை நிகழ்ந்த பதற்றமான பகுதிகளில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர் எனவும் கூறியுள்ளனர். எனவே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் மணிப்பூரில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
அசாமில் உள்ள 2 விமானநிலையங்களில் இருந்து IAF ஆனது C17 Globemaster மற்றும் AN 32 விமானங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ளப்டுகிறது. மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமை குறித்த பல போலி வீடியோக்கள் பரப்பப்படுவதைப் பற்றி இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை முகாம் மீதான தாக்குதலின் வீடியோ உட்பட மணிப்பூரில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்த போலி வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. இதனை நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…