டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தற்போது திகார் சிறையில் உள்ளார். சமீபத்தில் டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைச் சந்திக்க நேற்று தனது வீட்டிற்கு வந்தார். டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மணீஷ் சிசோடியா தனது மனைவியைச் சந்திக்க ஆறு மணி நேரம் அனுமதி அளித்தது.
காலை 10 மணியளவில் சிறை வேனில் மதுரா சாலையில் உள்ள தனது வீட்டிற்கு சிசோடியா வந்தடைந்தார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவரது மனைவியை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சந்திப்பு நேரம் முடிந்ததும் அவர் சிறைக்கு திரும்பினார். இந்த சந்திப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
மணீஷ் சிசோடியா கைது:
டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து, மார்ச் 9-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. கலால் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றன. பிப்ரவரி 28-ம் தேதி டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…