Manish Sisodia's custody extension again [file image]
Manish Sisodia: டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா.
இந்த சூழலில் டெல்லியில் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக சிசோடியா மீது குற்றம்சாட்ட நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதையடுத்து பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு நீதிமன்ற காவலில் மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடைய ஜாமீன் கோரி பல முறை மனுதாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 18ம் தேதி வரை நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேசமயம் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…