Manish Sisodia's custody extension again [file image]
Manish Sisodia: டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா.
இந்த சூழலில் டெல்லியில் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக சிசோடியா மீது குற்றம்சாட்ட நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதையடுத்து பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு நீதிமன்ற காவலில் மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடைய ஜாமீன் கோரி பல முறை மனுதாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 18ம் தேதி வரை நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேசமயம் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…