இந்தியாவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் பலரும் பொறுப்பற்ற முறையில் இருப்பது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி ஊரடங்கு தொடர்பாக 6-வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் பல உயிரிகள் காப்பாற்றப்பட்டது என தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர், தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை எனவும், மக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பொறுப்பற்ற முறையில் இருப்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி கொரோனா விதிமீறலுக்காக, ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிர ருபாய் அபராதம் விதிக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம் எனவும், பிரதமர் முதல சாமானிய மக்கள் வரை அனைவருக்கும் நமது நாட்டில் ஒரே விதிதான் என கூறினார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…