PM Modi - RahulGandhi - Mallikarjun kharge [File Image]
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கார்கே என பல அரசியல் தலைவர்கள் பக்ரீத் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களின் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே அனைத்து மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்களின் வழக்கப்படி கால்நடைகளை குர்பானி (பலி) கொடுத்து சமைத்து அதனை ஏழைகளுக்கு, உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு என வழங்கி வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி முதல் ராகுல்காந்தி வரை பல்வேறு கட்சியினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி :
பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகாரிஜுன கார்கே :
பக்ரீத் பண்டிகை தியாகம், நம்பிக்கை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் உன்னத பண்புகளை எடுத்துறைக்கிறது. இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்தவும், அமைதியான, இணக்கமான மற்றும் முற்போக்கான சமுதாயத்தை கட்டியெழுப்பவும் நாம் அனைவரும் உறுதியாக தீர்மானிப்போம்.
முன்னாள் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி :
இந்த மங்களகரமான தருணம் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும். பக்ரீத் வாழ்த்துக்கள் என புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் :
பக்ரீத் நாளின் அன்பான வாழ்த்துக்கள். இந்த விழா சகோதரத்துவத்தையும் கருணையையும் வளர்க்கட்டும் என வாழ்த்தியுள்ளார் .
காங்கிரஸ் கட்சி :
அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துக்கள். இந்த புனிதமான பண்டிகை மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஏராளமான ஆசீர்வாதங்களைக் கொண்டு வரட்டும். என காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் :
பக்ரீத் தின அன்பான வாழ்த்துக்கள். தியாகத்தின் இந்த புனிதமான நிகழ்வை நாம் கொண்டாடும்போது, அதன் ஆழமான படிப்பினைகளை – தன்னலமற்ற தன்மை மற்றும் அன்பின் முக்கியத்துவம் பற்றி சிந்திப்போம். பன்முகத்தன்மையைத் தழுவி, நமது சமூகங்களில் இரக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்துவோம் என தனது வாழ்த்துக்களை கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…