[file image]
MEFTAL (மெஃப்டல்) என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடு குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது. மெஃப்டல் என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி ஆகும். இது மாதவிடாய் வலி, மூட்டுவலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விரைவான நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மெஃப்டல் என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடுக்கு எதிராக இந்திய மருந்தியல் ஆணையம் (ஐபிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL என்ற வலி நிவாரணி மாத்திரை மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.!
அதாவது, ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு உள்ளது. தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் MEFTAL என்ற வலி நிவாரணி மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி வரும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான இந்திய மருந்தியல் ஆணையம் (IPC), இந்தியாவில் மருந்துகளுக்கான தரநிலைகளை அமைக்கிறது. இந்த சூழலில் வலி நிவாரணி மாத்திரை மெஃப்டல் தொடர்பான மோசமான விளைவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மருந்துப் பொருட்களுடன் தொடர்புடைய பாதகமான மருந்து எதிர்வினைகள் (ADRs) மற்றும் பாதகமான நிகழ்வுகள் பற்றிய தகவல்களைக் கண்காணித்து சேகரிக்கும் இந்திய பார்மகோவிஜிலன்ஸ் திட்டம் (PvPI), தனது முதற்கட்ட ஆய்வில், மெஃப்டல் மருந்து மெஃபெனாமிக் அமிலம் ஈசினோபிலியா மற்றும் அமைப்பு ரீதியான அறிகுறிகளுடன் மருந்து எதிர்வினைகளைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…