#BREAKING: மத்திய அரசு அனுமதி அளித்ததும் மேகதாது திட்டம் தொடங்கும் – எடியூரப்பா ..!

Published by
murugan

மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.

இதற்கு எதிராக கர்நாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முதன்மை அமர்வில் மேல்முறையீடு ஒன்றை செய்து இருந்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த முதன்மை அமர்வு குழு அமைக்கப்பட்டது தவறான விஷயம் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள உள்ளதால் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை  விசாரிப்பதற்கு எதுவும் தேவையில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தன.

இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார். மேகதாது அணை கட்டுமானம் கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டம், மேகதாது அணை திட்டத்தை திட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு அளித்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் எடியூரப்பா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

21 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago