Ministry of Home Affairs [File Image]
சென்னை : டிஜிட்டல் வாயிலாக பிளாக்மெயில் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதுள்ள இணையதள உலகில் மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசு அதிகாரிகள் என மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல், ஆன்லைன் மூலம் சிறைவைக்கும் செயல் என குற்ற செயல்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இப்படியான மோசடி கும்பல் திடீரென ஒரு நபருக்கு வெளிநாட்டு நம்பரில் இருந்து போன் செய்வார்கள், சம்பந்தப்பட்ட நபரிடம் , தாங்கள் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சிபிஐ என சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூறிக்கொள்வார்கள். பின்னர், உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் வந்துள்ளது என கூறி மிரட்டுவார்கள். பின்னர் உங்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என கூறி ஸ்கைப் போன்ற இணையதள இணைப்பை அனுப்பி ஒருநாள் முழுக்க வீட்டிலேயே டிஜிட்டல் கைது செய்வார்கள். பின்னர் அவர்களை பிளாக் மெயில் செய்து டிஜிட்டல் வாயிலாக அந்த மோசடி கும்பல் பணம் பறிப்பார்கள்.
இதுகுறித்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், ஓர் எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளது. அதாவது போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCP), CBI, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய மாநில அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் என கூறிக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்து, ‘பிளாக்மெயில்’ மற்றும் ‘டிஜிட்டல் கைது’ ஆகியவற்றில் ஈடுபடும் சைபர் குற்றங்கள் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இணையதளம் வாயிலாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு பெயரை கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிப்பது மற்றும் டிஜிட்டல் கைது செய்தல் தொடர்பான புகார்கள் காவல்துறைக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது எனவும் இதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…