மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து சில தலைவர்கள் மற்றும் நடிகர்களின் ட்வீட் பிளாக் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா காரணமாக நாட்டின் நிலைமை, மருந்துகளின் பற்றாக்குறை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலை ஆகியவற்றை விமர்சித்த ட்வீட்டுகளை தடை செய்யுமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து சில தலைவர்கள் மற்றும் நடிகர்களின் ட்வீட் பிளாக் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ட்விட்டரில் இது குறித்து ஏராளமான ட்வீட்டுகளை பலர் விமர்சித்து ட்விட் செய்து வருகின்றன. இந்த ட்வீட்டுகளை பிளாக் செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் முலோய் கட்டக், நடிகர் வினீத் குமார் சிங் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் வினோத் கபூர் மற்றும் அவினாஷ் தாஸ் உள்ளிட்ட சிலர் கொரோனா மற்றும் கும்பமேளா குறித்து பதிவிட்ட ட்வீட்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது.
பிளாக் செய்யப்பட்ட ட்வீட்டுகள் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாகக் கூறி, மத்திய அரசு ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து இந்த ட்வீட்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…