Categories: இந்தியா

மிசோரம் சட்டபேரவை தேர்தல்.! வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.!

Published by
மணிகண்டன்

அண்மையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 5 மாநில சட்ட மன்ற தேர்தல் தேதியினை அறிவித்தது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று, வரும் டிசம்பர் 3ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  மிசோராமில் மிசோரம் மக்கள் முன்னேற்ற கட்சி (MNF) ஆட்சி செய்து வருகிறது, சோரம்தாங்கா முதல்வராக பொறுப்பில் உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் – ராகுல் காந்தி

இந்த மிசோராம் தொகுதியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி மும்முரமாக தேர்தல் வேலைகளில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மிசோராமில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.

ஏற்கனவே பாஜக மிசோராமில் தனது தேர்தல் வேலைகளை ஆரம்பித்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை மிசோராம் தேர்தல் பொறுப்பாளராக அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை தற்போது அறிவித்துள்ளது.

கடைந்த 2018ஆம் ஆண்டு மிசோராம் சட்டமன்ற தேர்தலில் ஆளும் எம்என்எப்  26 தொகுதிகளையும், ஜோராம் மக்கள் இயக்கம் 8 தொகுதிகளையும் , காங்கிரஸ் 5 தொகுதிகளையும் , பாஜக ஒரு தொகுதியையும்   கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

11 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

32 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

46 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago