Mizoram Assembly Election BJP Candidate list [File Image]
அண்மையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 5 மாநில சட்ட மன்ற தேர்தல் தேதியினை அறிவித்தது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று, வரும் டிசம்பர் 3ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மிசோராமில் மிசோரம் மக்கள் முன்னேற்ற கட்சி (MNF) ஆட்சி செய்து வருகிறது, சோரம்தாங்கா முதல்வராக பொறுப்பில் உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் – ராகுல் காந்தி
இந்த மிசோராம் தொகுதியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி மும்முரமாக தேர்தல் வேலைகளில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மிசோராமில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார்.
ஏற்கனவே பாஜக மிசோராமில் தனது தேர்தல் வேலைகளை ஆரம்பித்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை மிசோராம் தேர்தல் பொறுப்பாளராக அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை தற்போது அறிவித்துள்ளது.
கடைந்த 2018ஆம் ஆண்டு மிசோராம் சட்டமன்ற தேர்தலில் ஆளும் எம்என்எப் 26 தொகுதிகளையும், ஜோராம் மக்கள் இயக்கம் 8 தொகுதிகளையும் , காங்கிரஸ் 5 தொகுதிகளையும் , பாஜக ஒரு தொகுதியையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…