Categories: இந்தியா

மோச்சா புயல் தாக்கம்…3 பேர் பலி..பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

Published by
பால முருகன்

மியான்மரில் மோச்சா புயல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

வங்கக்கடலில் உருவான ‘மோக்கா’ புயல் தென்கிழக்கு வங்கதேசம்  வடக்கு மியான்மர் இடையே நேற்று கரையை கடந்தது. புயல் கரையையை கடந்தபோது, போது 210 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது.

இந்த கடுமையான புயலால் பங்காளதேஷின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் கரையைக் கடந்தபோது பங்காளதேஷ் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகரங்களில் இருந்த புயல் வீடுகள், மின் மாற்றிகள், செல்போன் டவர்கள்,  படகுகள் மற்றும் விளக்குக் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கூனின் தென்மேற்கே சுமார் 425 கிலோமீட்டர் (264 மைல்) தொலைவில் உள்ள கோகோ தீவுகளில் உள்ள விளையாட்டு கட்டிடங்களின் கூரைகளையும் புயல் கிழித்துவிட்டது.

மேலும், இந்த புயலில் மியான்மரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில்,  ஒருவர் ஆலமரம் மேலே விழுந்து உயிரிழந்தாவும் கூறப்படுகிறது. மேலும், பங்காளதேஷின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உட்பட பல கடலோர பகுதிகள் இருந்த  ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பலத்த காற்று வீசிய பதைபதைக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

9 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago