கொரோனா வைரஸ் பிரச்சினையை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது! – சோனியா காந்தி

Published by
லீனா

கொரோனா வைரஸ் பிரச்சினையை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கொரோனா வைரஸ் பிரச்சினையை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது என்றும், மோடி அரசின் மாபெரும் தோல்விகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், துரதிருஷ்டம் என்பது தனியாக வருவதில்லை. பொருளாதார பின்னடைவு, கொரோனா பிரச்சினை, சீனாவுடனான எல்லை விவகாரம் என்று சேர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் மோடி அரசின் மோசமான நிர்வாகமும், தவறான கொள்கைகளுமே காரணம் என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கொரோனா பிரச்சினையில், சுகாதார கட்டமைப்பு குறைபாடு அம்பலம் ஆகியுள்ளது. மத்திய அரசு சொல்லும் ‘உச்சம்‘ எப்போது வரும் என்றே தெரியவில்லை. இப்போது, மாநில அரசுகளிடம் மத்திய அரசு பொறுப்பை மாற்றி விட்டுவிட்டது. ஆனால், கூடுதல் நிதிஉதவி வழங்கவில்லை. மக்கள், தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளுமாறு விட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

10 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

11 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

12 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

12 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

13 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

14 hours ago