உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியான பாஜகவுக்கான பிரசாரத்தை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் உரையாற்றுகிறார்.
உத்தரபிரதேசம், பஞ்சாப் , உத்தரகாண்ட் , மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 31-ம் தேதி வரை பேரணிகள் மற்றும் சாலை நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், உ.பி.யில் சட்ட மன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். மேற்கு உ.பி.யில் உள்ள ஹாரன்பூர், பாக்பத், ஷாம்லி, முசாபர்நகர் மற்றும் கௌதம் புத்த நகர் போன்ற ஐந்து மாவட்டங்களில் ஒரே நேரத்தில் பிரதமர் மோடி நாளை மறுநாள் காணொலி மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த காணொலி பிரச்சாரம் மூலம் சுமார் 21 சட்டமன்ற தொகுதிகளை அடைய கட்சி திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்காக 21 தொகுதிகளில் பெரிய எல்இடி(LED) திரை அமைக்கப்பட்ட உள்ளது. ஒரு எல்இடி(LED) திரையில் சுமார் 500 பேரைக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்தத் தடையை நீட்டித்தால் இதேபோன்ற காணொளி மூலம் பிரசாரத்தை பிரதமர் செய்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…