கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்தியாவில் 5865 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் அதிகமாக மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் பாதித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு, ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக ரூ .11,092 கோடியை ஒதுக்கியது. அந்த நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு பணம் ஒதுக்காமல் மாறாக மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு பணம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அதற்கு ஏற்றாற்போல மஹாராஷ்டிராவிற்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.510 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.குறைவாக பாதிக்கப்பட்ட உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால் கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா.? என்ற கேள்வியை எழுப்பினர்.மேலும் இது குறித்து மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையெடுத்து இன்று கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…