6 வயது மகனை கழுத்தை அறுத்து கொன்ற தாய் – கடவுள் உத்தரவால் கொலை செய்ததாக வாக்குமூலம்!

Published by
Rebekal

தனது 6 வயது மகனை குளியலறைக்குள் தூக்கி சென்று கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவன் சிறிது நேரத்தில் உயிர் பெறுவான் எனவும், கடவுள் உத்தரவால் தான் இவ்வாறு செய்ததாகவும் மகனின் தாய் சஹீதா கூறியுள்ளார். 

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு அருகே உள்ள பூலகாட் எனும் பகுதியை சேர்ந்த சுலைமான் சஹீதா ஆகிய தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அருகிலுள்ள மதரசாவில் சஹீதா ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறாராம். இந்நிலையில், மீண்டும் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சஹீதாவிற்கு கடந்த சில நாட்களாக தோஷம் இருந்ததாகவும், இதனால் அடிக்கடி சோர்வாகவும் மந்தமாகவும் இருந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் தனது 6 வயது மகனை நரபலி கொடுத்தால் தனது தோஷம் நீங்கி அதன்பின் சிறிது நேரத்தில் மகன் உயிருடனும் வந்துவிடுவான் என சஹீதாவிற்கு கனவு ஒன்று வந்ததாம்.

இதையடுத்து தனது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது 6 வயது மகனை குளியலறைக்குள் தூக்கி சென்று கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சஹீதா. அதன்பின் பாலக்காடு தெற்கு காவல் நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு தனது மகனை கொலை செய்து விட்டதாகவும் அவரே கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது கடவுளின் உத்தரவின் பேரில் தான் தனது மகனை கொலை செய்ததாகவும், இன்னும் சிறிது நேரத்தில் தனது மகன் உயிர் பெற்று விடுவார் எனவும் கூறியுள்ளார். பெட்ரா தாயே மகனை கொலை செய்துவிட்டு, போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளதுடன் இன்னும் சிறிது நேரத்தில் உயிர் பெறுவான் என இரத்த வெள்ளத்தில் கிடைக்கும் மகனை பார்த்து கூறும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

26 minutes ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

1 hour ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

3 hours ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

4 hours ago