6 வயது மகனை கழுத்தை அறுத்து கொன்ற தாய் – கடவுள் உத்தரவால் கொலை செய்ததாக வாக்குமூலம்!

Published by
Rebekal

தனது 6 வயது மகனை குளியலறைக்குள் தூக்கி சென்று கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவன் சிறிது நேரத்தில் உயிர் பெறுவான் எனவும், கடவுள் உத்தரவால் தான் இவ்வாறு செய்ததாகவும் மகனின் தாய் சஹீதா கூறியுள்ளார். 

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு அருகே உள்ள பூலகாட் எனும் பகுதியை சேர்ந்த சுலைமான் சஹீதா ஆகிய தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அருகிலுள்ள மதரசாவில் சஹீதா ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறாராம். இந்நிலையில், மீண்டும் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சஹீதாவிற்கு கடந்த சில நாட்களாக தோஷம் இருந்ததாகவும், இதனால் அடிக்கடி சோர்வாகவும் மந்தமாகவும் இருந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் தனது 6 வயது மகனை நரபலி கொடுத்தால் தனது தோஷம் நீங்கி அதன்பின் சிறிது நேரத்தில் மகன் உயிருடனும் வந்துவிடுவான் என சஹீதாவிற்கு கனவு ஒன்று வந்ததாம்.

இதையடுத்து தனது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது 6 வயது மகனை குளியலறைக்குள் தூக்கி சென்று கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சஹீதா. அதன்பின் பாலக்காடு தெற்கு காவல் நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு தனது மகனை கொலை செய்து விட்டதாகவும் அவரே கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது கடவுளின் உத்தரவின் பேரில் தான் தனது மகனை கொலை செய்ததாகவும், இன்னும் சிறிது நேரத்தில் தனது மகன் உயிர் பெற்று விடுவார் எனவும் கூறியுள்ளார். பெட்ரா தாயே மகனை கொலை செய்துவிட்டு, போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளதுடன் இன்னும் சிறிது நேரத்தில் உயிர் பெறுவான் என இரத்த வெள்ளத்தில் கிடைக்கும் மகனை பார்த்து கூறும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

5 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

5 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

7 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

8 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

8 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

9 hours ago