ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மத்தியில்,தனியார் நிறுவனம் ஒன்று ஆக்ஸிஜன் வழங்கியதற்காக மத்திய பிரதேச எரிசக்தி அமைச்சர் பிரதும்ன்யா சிங் தோமர் தலை குனிந்து வணங்கி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச எரிசக்தி மந்திரி பிரதும்ன்யா சிங் தோமர்,ஏப்ரல் 24 ஆம் தேதியன்று மலான்பூரில் உள்ள சூர்யா என்ற தனியார் நிறுவனத்திடம்,மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது குறித்து கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து சூர்யா நிறுவனம் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுகொண்டது.அதன்பிறகு,நிறுவனம் தங்கள் ஆலையை மூடிவிட்டு குவாலியர், பிந்த் மற்றும் மோரேனா ஆகிய நகர்ப்புற பகுதிகளுக்கு 250 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியது.இதன் காரணமாக அமைச்சர் பிரதும்ன்யா சிங் தோமர்,உடனே தலை குனிந்து வணங்கி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
அதன் பின்னர் இதுகுறித்து தோமர் கூறுகையில்,”நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் இந்த சூழலில்,சூர்யா நிறுவனம் தங்கள் ஆலையை மூடிவிட்டு 250 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்து,மனிதகுலத்திற்கு மிக முக்கியமான சேவை பணிகளைச் செய்திருக்கிறது.
இதைப் போல மற்ற நிறுவனங்களும்,அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்க உதவ முன்வர வேண்டும்”,என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து,சூர்யா நிறுவனம் ஆக்ஸிஜன் வழங்கியதற்காக மத்திய பிரதேச எரிசக்தி அமைச்சர் பிரதும்ன்யா சிங் தோமர் தலை குனிந்து வணங்கி நன்றி தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…