Mamata Banerjee expresses [File Image]
சென்னை: மும்பையில் ராட்சத விளம்பரப் பலகை கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
மும்பையின் காட்கோபர் பகுதியில் நேற்று வீசிய புழுதிப் புயலில், பெட்ரோல் பம்ப் மீது 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது, 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று இரவு 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குடிமைத்துறை அதிகாரிகளின் தகவலின்படி, இந்த விளம்பர பலகை சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.
நேற்று வீசிய புழுதிப் புயல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் மாலையில் ஒரு மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அது மட்டுமில்லாமல், உள்ளூர் ரயில்களின் சேவைகள் தாமதமானது, பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…