இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் மத்திய , மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதில் ஒன்றாக தான் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு.
இதையெடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க கடைகளுக்கும் , மார்க்கெட்க்கும் செல்லும்போது கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என மத்திய , மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
மேலும் கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் கிருமி நாசினி மற்றும் முகக்கவசங்களை மத்திய அரசு அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இணைத்துள்ளது. இதனால் கிருமி நாசினி மற்றும் முகக்கவசங்களை பதுக்குவதும் , அதிக விலைக்கு விற்பது குற்றம் எனவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அனைவரும் அதிகமாக கிருமி நாசினி மற்றும் முகக்கவசங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சிலர் இதை பயன்படுத்தி கொண்டு போலி கிருமி நாசினி தயாரிப்பது , முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பது , பதுங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையெடுத்து போலீசார் அவ்வப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் மும்பையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பதுக்கியவர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த முகக்கவசங்களின் மதிப்பு ரூ.35.84 லட்சம் என கூறப்படுகிறது. இதையெடுத்து மும்பை போலீஸ் முகக்கவசங்களை பதுக்கியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…