ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பட்ட பகலில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி கடந்த 5-ஆம் தேதி ஜெய்ப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஷியாம்நகர் பகுதியில் உள்ள சுக்தேவ் சிங் கோகமேடி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு அவர் மெட்ரோ மாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்து தெரியாத நிலையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நேற்று இரவு டெல்லி குற்றப்பிரிவு மற்றும் சண்டிகர் காவல்துறை கூட்டு நடவடிக்கையில் சண்டிகரில் கைது செய்யப்பட்டனர்.
ரோஹித் ரத்தோர் மற்றும் நிதின் ஃபௌஜி , உதம் ஆகிய 3 நபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை கூறுகையில், கொலை செய்தபிறகு , குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் ஆயுதங்களை மறைத்து ராஜஸ்தானில் இருந்து ஹரியானாவில் உள்ள ஹிசார் சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சென்றனர். பிறகு சண்டிகர் திரும்பியபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மொபைல் சிக்னல் அடிப்படை மூலம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தோம் என தெரிவித்தனர்.
இந்த கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஏடிஜி தினேஷ் கூறுகையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறினார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…