உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் அவளுடைய கணவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சிறையில் இருக்கும் தனது கணவர் பக்ரீத் பண்டிகையின் போது தனக்கு புது ஆடை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் அப்பெண் பக்ரீத் பண்டிகையின் போது புது ஆடை வாங்கி செல்லாததால் இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவன் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். குறித்த பெண் கூறுகையில் , பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வருமாறு கூறினார். ஆனால் என்னிடம் போதிய பணம் இல்லாததால் ஆடை வாங்கி செல்ல முடியவில்லை இதைத் தொடர்ந்து நான் சந்திக்க சென்றபோது முத்தலாக் கூறினார். என்னுடைய உறவினர்களை அழைத்து சென்றபோது மீண்டும் முத்தலாக் கூறினார்.
இதையடுத்து அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் என் கணவர் மீது இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. முத்தலாக் தடை சட்டம் பிறகு பதிவு செய்யப்பட்ட எட்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…