எனது தந்தை எனக்கு ஹீரோதான், அவரது மறைவு வருத்தமளித்தாலும் மனதை தேற்றுகிறேன் என மறைந்த வீரர் பிரிகேடியர் மகள் கூறியுள்ளார்.
ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் . இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் அவர்களின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டரும் ஒருவர்.
இவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்த அவரது மகளான ஆஷ்னா அவரது தந்தை சவப்பெட்டியை பார்த்து கதறி அழுதுள்ளார். அதன் பின்பதாக பேசிய அவர், எனது தந்தை எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவர் எனக்கு ஒரு ஹீரோ. அவர் சீக்கிரம் போய் விட்டார். இருந்தாலும் எங்களுக்கு நல்லது நடக்க அவர் தொடர்ந்து ஆசி புரிவார்.
அவர் எனக்கு நல்ல ஊக்க சக்தியாக திகழ்ந்தவர். இத்தனை வருடங்கள் என்னுடன் அவர் இருந்த காலங்களை நினைத்து கொண்டிருக்கிறேன். அவரது மரணம் எனக்கு ஒரு பெரிய இழப்பு தான். இருந்தாலும் மன உறுதியோடு இருக்க வேண்டும் என எனது மனதை தேற்றிக் கொள்கிறேன் என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…