எனது தந்தை எனக்கு ஹீரோ; மறைவு வருத்தமளித்தாலும் மனதை தேற்றுகிறேன் – பிரிகேடியர் மகள்!

Published by
Rebekal

எனது தந்தை எனக்கு ஹீரோதான், அவரது மறைவு வருத்தமளித்தாலும் மனதை தேற்றுகிறேன் என மறைந்த வீரர் பிரிகேடியர் மகள் கூறியுள்ளார்.

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் . இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் அவர்களின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டரும் ஒருவர்.

இவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்த அவரது மகளான ஆஷ்னா அவரது தந்தை சவப்பெட்டியை பார்த்து கதறி அழுதுள்ளார். அதன் பின்பதாக பேசிய அவர், எனது தந்தை எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவர் எனக்கு ஒரு ஹீரோ. அவர் சீக்கிரம் போய் விட்டார். இருந்தாலும் எங்களுக்கு நல்லது நடக்க அவர் தொடர்ந்து ஆசி புரிவார்.

அவர் எனக்கு நல்ல ஊக்க சக்தியாக திகழ்ந்தவர். இத்தனை வருடங்கள் என்னுடன் அவர் இருந்த காலங்களை நினைத்து கொண்டிருக்கிறேன். அவரது மரணம் எனக்கு ஒரு பெரிய இழப்பு தான். இருந்தாலும் மன உறுதியோடு இருக்க வேண்டும் என எனது மனதை தேற்றிக் கொள்கிறேன் என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

9 minutes ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

33 minutes ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

1 hour ago

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…

2 hours ago

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

3 hours ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

3 hours ago