Categories: இந்தியா

மைசூர்:தீயில் கருகிய 11,000 புத்தகங்கள் கொண்ட நூலகம்-ஏழை முதியவருக்கு குவியும் நிதியதவி.

Published by
Edison

மைசூரில்,ஏழை முதியவர் ஒருவர் நடத்தி வந்த பொது நூலகம் ஒன்று தீயில் எரிந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள உதயகிரி பகுதியில் சையத் இசாக் என்ற 65 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பொது நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

2011ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்நூலகத்தில்,திருக்குறள்,குரான்,பொது அறிவு உள்ளிட்ட 11,000 நூல்கள் இருந்தன.கடந்த வெள்ளிக்கிழமையன்று,காலை சையத் நூலகத்திற்கு வந்தபோது நூலகம் தீயில் எரிந்து தரைமட்டமாய் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனால் சையத், நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.மேலும்,நூலகம் எறிந்த சம்பவம் சையதிற்கும்,அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

இதுகுறித்து சையது கூறுகையில்,”சிறு வயதில் என்னால் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை,அதனால் தான் மற்றவர்களாவது படிக்க வேண்டும் என்று இந்த பொது நூலகத்தை ஆரம்பித்தேன்.மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கூறிய “ஒரு சிறந்த புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்கு சமம்” என்ற வசனம் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது.ஆகவே எரிந்த நூலகத்திற்கு பதிலாக வேறொரு நூலகத்தை அமைப்பேன்”,என்று கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து முதியவருக்கு ஆதராவக சிலர் நிதி திரட்டி வருகின்றனர்.சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குள் ரூ.17லட்சம் நிதயுதவி கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Published by
Edison

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

38 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

54 minutes ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

3 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

3 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

4 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

5 hours ago