ஆந்திராவில் 250க்கும் மேற்பட்டவர்களை மர்ம நோய் தாக்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆந்திர முதல்வர்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, எலுரு என்ற நகரில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், வலிப்பு மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர்கள் அனைவரும் எலுரு பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் சிறப்பு சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் மக்கள் நோய் வாய்ப்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாக கூறிய நிலையில், தற்போது வரை இந்த நோய்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும், மருத்துவரகளிடம் இந்த மர்ம நோயின் பின்னணி குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை எலுரு மருத்துவமனைக்கு விரையவும் உத்தரவிட்டார். மேலும், உள்ளூர்வாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், சிகிச்சைகளையும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…