ஐநா சபை விவாதத்திற்கு தலைமை தாங்கும் முதல் இந்தியப் பிரதமராக பிரதமர் மோடி உள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைவராக முதல் முறையாக ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது.ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி, பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, மாதம் ஒரு நாடு இருக்கும்.அதன்படி,தற்போது இந்தியா பொறுப்பேற்றுள்ளது.
பிரதமர் தலைமை:
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) கடல் பாதுகாப்பு குறித்து ஒரு வெளிப்படையான விவாதத்திற்கு தலைமை தாங்குகிறார்.
பெருமை:
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) தகவலின்படி, வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு ஐநா சபை விவாதத்திற்கான சந்திப்பு நடைபெற உள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் திறந்த விவாதத்திற்கு தலைமை தாங்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி அவர்கள் பெற்றுள்ளார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக,நேற்று பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆகஸ்ட் 9, மாலை 5:30 மணிக்கு, “கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல்: சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு வழக்கு” என்ற தலைப்பில் UNSC உயர்மட்ட திறந்த விவாதத்திற்கு தலைமை தாங்குகிறது”,என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறை:
ஐநாவின் நிரந்தரமற்ற உறுப்பினராக, ஆகஸ்ட் மாதத்திற்கான உலகின் முன்னணி அமைப்பின் தலைமையை இந்தியா கொண்டுள்ளது. முன்னதாக,ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடல் பாதுகாப்பு மற்றும் கடல் குற்றத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்றியது. எவ்வாறாயினும், இது போன்ற உயர்மட்ட திறந்த விவாதத்தில் ஒரு தனித்துவமான நிகழ்ச்சியில் ஒரு முழுமையான முறையில் கடல்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஜனாதிபதி அறிக்கை:
கடந்த ஜூலை 21 ஆம் தேதி ஜனாதிபதி அறிக்கையின் முதல் வரைவை இந்தியா வெளியிட்டது மற்றும் உரையை விவாதிக்க கவுன்சில் உறுப்பினர்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். வரைவு ஜனாதிபதி அறிக்கை ஆகஸ்ட் 6 அன்று நிறைவேற்றப்பட்டது.
பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையின்படி, “ஜனாதிபதி அறிக்கையின் முன்கூட்டிய வரைவு, கடல்சார் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் குறித்து பொதுச்செயலாளர் கவுன்சிலுக்கு, ஒரு முழுமையான அறிக்கையை அளிக்கும்படி கோரியது. இருப்பினும், இந்த முன்மொழிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது,மேலும் அது உரையில் தெரிவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
UNSC விவாதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் :
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…