Yoga Day 2024 [File Image]
சர்வதேச யோகா தினம் : 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்கள் மலைகளிலும் மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் போர்க்கப்பலில் யோகாசனம் செய்தன.
கடந்த 2014ஆம் ஆண்டில் சர்வதேச யோகா தினத்தை பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்தார். அதை, 177 உலகநாடுகள் ஆதரித்த நிலையில், உலகம் முழுவதும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மாநாட்டு மையத்தில் பிரதமர் மோடி யோகாசனம் செய்ததோடு, நாட்டு மக்களுக்கும், உலகெங்கும் யோகா செய்பவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிலையில், இன்று இந்திய ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள பீர் பாஞ்சால் மலைத்தொடர்களில் யோகாசனம் செய்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், வீரர்கள் தங்கள் சீருடைகளை முழுமையாக மூடிக்கொண்டு, பனி மூட்டத்தையும் பொருட்படுத்தாமல் 10-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பல்வேறு யோகானங்களை செய்தனர். மேலும், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகா செய்தார்.
இதனிடையே, தனுஷ்கோடியில் இந்திய கடற்படை வீரர்கள் ஐஎன்எஸ் தர்காஷ் மற்றும் ஐஎன்எஸ் டெக் போன்ற போர்க்கப்பல்களில் சூரிய நமஸ்கர் உட்பட பல்வேறு யோகா ஆசனங்களைச் செய்தனர்.
10வது சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் வகையில், இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவின் மாலுமிகள் இன்று அதிகாலை நடைபெற்ற அந்த யோகாசனத்தில் சில குழந்தைகளும் பங்கேற்றனர்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…