மோசடி வழக்கில் கைதான நீரவ் மோடி .! ஒப்படைப்பு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது.!

Published by
Ragi

மோசடி வழக்கில் லண்டனில் கைதான நீரவ் மோடியை இந்தியாவிற்கு ஒப்படைக்க கோரி தொடரப்பட்ட வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை இன்று தொடங்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, கடந்தாண்டு மார்ச் 19 ஆம் தேதி லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், இவரை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப கோரி இந்திய அரசு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. அதன்படி இந்திய அரசின் கோரிக்கையின் படி ஐந்து நாள் ஒப்படைப்பு விசாரணை தொடங்கப்பட்டது. அதன் முதல்கட்ட ஒப்படைப்பு விசாரணை மே மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை, கொரோனா கட்டுபாட்டுகள் காரணமாக லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறை அறையிலிருந்து வீடியோ கால் வாயிலாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் இன்று  தொடங்கப்பட்டது.

அதில் இது குறித்த கூடுதல் விசாரணையை நவம்பர் 3-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ,அதில் ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இறுதி டிசம்பர் மாதம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

3 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

4 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

5 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

7 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

7 hours ago