“NEET” ஏழை மாணவர்களுக்குப் பலம் தருவதாக இருக்கிறது – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Published by
பாலா கலியமூர்த்தி

நீட் தேர்வு அவசியம் தேவை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் கருத்து.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன், ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு என்பது அவசியம் தேவை.

மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக ஆக முடியும். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிய பொதுத்தேர்வு உள்ளதை போல் திறமையான மருத்துவர்களை கண்டறிவதற்காக நீட் என குறிப்பிட்டார்.

மேலும், நன்றாக படித்தால் யார் வீட்டு பிள்ளை வேண்டுமானாலும் எந்த கிராமத்து பிள்ளை வேண்டுமானாலும் கண்டிப்பாக மருத்துவர் ஆகலாம் என்பது தான் நீட். நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு பலம் தருவதாக இருக்கிறது. நீட் தேர்வில் வரும் பாடங்கள் அனைத்தும் நாம் படிக்கும் பாடங்களில் இருந்து மட்டும் தான் வருகிறது என்றும் வெளி பாடங்களில் இருந்து வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வின் தாக்கம் தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு, தமிழக அரசிடம் 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago