இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் திறன்கொண்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் இரட்டை பிரிவு கொண்ட உருமாறிய கொரோனா வைரஸை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸானது நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் திறன் கொண்டதாகும். இந்த புதிய வைரஸானது ‘பி.1.618’ என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் பிறழ்வு வைரஸ் என்று அழைக்கப்படும், ‘பி.1.617’ என்ற வைரஸில் இருந்து மாறுபட்டதாகும்.
இந்த வைரஸ் குறித்து டெல்லி சி.எஸ்.ஐ.ஆர்.மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால் கூறுகையில், ‘இந்த வைரஸை கண்டு அலறவேண்டாம். நிலையான பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது போதுமானது’ என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வைரஸ் ஆனது முதன்மையாக இந்தியாவில் காணப்பட்டாலும், இது அமெரிக்கா சிங்கப்பூர் சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…