இந்தியாவில் 14 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று!

Published by
Rebekal

இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் தற்பொழுது மீண்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று இன்னும் உலக அளவில் அதிக பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் தாக்கமே குறையாத நிலையில் இந்த கொரோனா வைரஸ் இப்பொழுது புதிதாக உருவெடுத்து மேலும் அதிகமான பாதிப்பு கொண்ட நோயை பரப்புகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை விட தற்போது உருவாகியுள்ள புதிய வைரஸ் 70 சதவீதம் அதிகமாக பரவக் கூடியது எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்தமாக 20 பேர் கொரோனா வைரஸால் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் புதிதாக 14 பேர் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் டெல்லியிலும், 7 பேர் பெங்களூருவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக கொரானா வைரஸ் தொற்றை கொண்டுள்ள நபர்கள் அனைவருமே ஐரோப்பாவிலிருந்து அண்மையில் திரும்பி வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 6 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பாதிப்பை கொடுத்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில், புதிய கொரோன வைரஸின் தாக்கம் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago