இதய செயலிழப்பு கோளாறு சிகிச்சைக்காக Dapagliflozin (ஃபார்ஸிகா) எனும் மருந்துக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் விலை 4,800 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
இதய செயலிழப்பு கோளாறு சிகிச்சைக்காக தற்போது புதிய மருந்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, Dapagliflozin (ஃபார்ஸிகா) எனும் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை AstraZeneca Pharma India Limited என்கிற நிறுவனம் அரசின் அனுமதிக்காக சோதனைக்கு உட்படுத்தியது. DAPA-HF ஆய்வு முடிவுக்கு பின்னர், மேற்கண்ட மருந்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஆசியாவில் உள்ள இதய நோயாளிகள் உட்பட இந்தியாவை சேர்ந்த இதய நோயாளிகளும் உட்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கான டி.சி.ஜி.ஐயின் விரைவான ஒப்புதல் செயல்முறையில் இதுவும் ஒன்றாகும்.
இதன் மூலம், இதய கோளாறு மோசமடைதலானது 26 சதவீதம் குறைந்துள்ளது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனால், இதய கோளாறு இறப்புகள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மருந்தின் விலை இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு 4,800 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இது வளர்ந்த நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட 80 சதவீதம் குறைவு என கூறப்படுகிறது. இதன் விற்பனை இம்மாதம் (ஜூலை) முதல் இந்தியாவில் தொடங்க உள்ளதாம்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…