மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவுபால் மாவட்டத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், அதற்கு சிகிச்சை அளித்து விரைவில் மக்களை குணப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவுபால் மாவட்டத்தில் வாங்ஜிங்கில் உள்ள லாம்டிங் மேல்நிலைப்பள்ளியில், கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தவதற்காக 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு திறக்கப்பட்டது. இதனை அம்மாநில அமைச்சர் டாக்டர் தோச்சோம் ராதேஷ்யம் திறந்து வைத்தார்.
ஏற்கனவே, இம்மாவட்ட மருத்துவமனையில் 30 படுக்கையறைகள் கொண்ட கொரோனா வார்டும், ஜி.என்.எம் நர்சிங் காலேஜில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தபின் அமைச்சர் பேசுகையில், தவுபால் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிவருவதாக தெரிவித்தார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…