பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்காக வாங்கிய இரண்டு வி.வி.ஐ.பி ஏர் இந்தியா ஒன் விமானத்தில் ஒன்று இன்று இந்தியாவிற்கு வருகிறது. இந்த விமானம் பிற்பகல் 4 மணியளவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விமானம் முன்பு இருந்த போயிங் விமானத்தை விட மிகவும் பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டது.
இந்த சிறப்பு விமானத்தின் சிறப்பு அம்சங்கள்:
இரண்டு ஏர் இந்தியா ஒன் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.
இந்த விமானம் இரட்டை GE90-115 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. விமானம் மணிக்கு 900 கி.மீ வேகத்தில் பறக்க முடியும்.
இந்த விமானம் ஏவுகணை தாக்குதல் அல்லது விமான விபத்தில் இருந்து பாதுகாக்கும்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் போது, எங்கும் எரிபொருள் நிரப்ப தரையிறங்க வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து 17 மணி நேரத்திற்கும் மேலாக பயணிக்க முடியும்.
இந்த விமானங்களை இயக்க ஏர் இந்தியா 40 மூத்த விமானிகளையும் தேர்வு செய்துள்ளது. இந்த 40 விமானிகள் மட்டுமே இந்த இரண்டு விமானங்களை இயங்குவார்கள்.
இந்த விமானத்தில் ஒரு ஆய்வகம், சாப்பாட்டு அறை, பெரிய அலுவலகம் மற்றும் மாநாட்டு அறை உள்ளது.மேலும், மருத்துவ அவசரநிலைக்கு விமானத்தில் மருத்துவ தொகுப்பும் உள்ளது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…