ஜூலை 1 ஆம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சேவை கட்டணங்கள்…!

Published by
Edison

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய சேவை கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்பு வைப்பு (பிஎஸ்பிடி) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.இந்த புதிய கட்டணங்களானது,  ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல்,செக் புக்,பணப் பரிமாற்றம் மற்றும் பிற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.அதன்படி,

எஸ்பிஐ கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்தால் பெறப்படும் கட்டணம்:

ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் ஏடிஎம் மையம் மற்றும் வங்கி கிளைகளில் பணத்தை எடுத்தால் அதற்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.அதன்படி,வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய புதிய கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி ஆகும்.

காசோலை(செக் புக்) புத்தகக் கட்டணங்கள்:

எஸ்.பி.ஐ வங்கியில் ஒரு வருடத்தில் 10 முறைக்கு மேல் காசோலை வாயிலாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.அதன் பிறகு,10 முறைக்கு மேல் காசோலை வாயிலாக பணம் எடுத்தால் ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி,

மேலும்,25 முறைக்கு மேல் எடுத்தால் ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக  வசூலிக்கப்படும்.அவசர காசோலை மூலம், 10 முறைக்கு மேல் எடுத்தால் ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

ஆனால்,மூத்த குடிமக்களுக்கு காசோலை மூலம் பணம் எடுக்கும்போது புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி கிளைகளில் பிஎஸ்பிடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

இந்த மாத தொடக்கத்தில்,எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 6.70% ஆக குறைத்தது.அதன்படி,எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 30 லட்சம் லோன் பெற்றவர்களுக்கு  வட்டி விகிதம் 6.70 சதவீதமாகும்.ரூ.30 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை பெற்றவர்களுக்கு 6.95% வட்டி விகிதமாகும்.மேலும்,ரூ.75 லட்சத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு 7.05% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.

Published by
Edison

Recent Posts

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

3 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

2 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

5 hours ago