ஜூலை 1 ஆம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சேவை கட்டணங்கள்…!

Published by
Edison

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய சேவை கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்பு வைப்பு (பிஎஸ்பிடி) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.இந்த புதிய கட்டணங்களானது,  ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல்,செக் புக்,பணப் பரிமாற்றம் மற்றும் பிற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.அதன்படி,

எஸ்பிஐ கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்தால் பெறப்படும் கட்டணம்:

ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் ஏடிஎம் மையம் மற்றும் வங்கி கிளைகளில் பணத்தை எடுத்தால் அதற்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.அதன்படி,வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய புதிய கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி ஆகும்.

காசோலை(செக் புக்) புத்தகக் கட்டணங்கள்:

எஸ்.பி.ஐ வங்கியில் ஒரு வருடத்தில் 10 முறைக்கு மேல் காசோலை வாயிலாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.அதன் பிறகு,10 முறைக்கு மேல் காசோலை வாயிலாக பணம் எடுத்தால் ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி,

மேலும்,25 முறைக்கு மேல் எடுத்தால் ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக  வசூலிக்கப்படும்.அவசர காசோலை மூலம், 10 முறைக்கு மேல் எடுத்தால் ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

ஆனால்,மூத்த குடிமக்களுக்கு காசோலை மூலம் பணம் எடுக்கும்போது புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி கிளைகளில் பிஎஸ்பிடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

இந்த மாத தொடக்கத்தில்,எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 6.70% ஆக குறைத்தது.அதன்படி,எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 30 லட்சம் லோன் பெற்றவர்களுக்கு  வட்டி விகிதம் 6.70 சதவீதமாகும்.ரூ.30 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை பெற்றவர்களுக்கு 6.95% வட்டி விகிதமாகும்.மேலும்,ரூ.75 லட்சத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு 7.05% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.

Published by
Edison

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

11 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

37 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago