புனேவில் கார் – லாரி மோதி கொண்டதில் 9 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து சோலாப்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 9 இளைஞர்கள் கடாம்வாக் வஸ்தி என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. அதில் காரில் வந்த 9 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் ,உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் ,காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் முதற்கட்டமாக வேகமாக காரை ஓட்டி சென்றது தான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…