#BreakingNews : வங்கிக்கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

Published by
Venu

வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

மேலும், இவரை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.அதன்படி இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப கோரி இந்திய அரசு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.அதில்,நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிபதி சாமுவேல் கூஸ்  வெளியிட்டுள்ள தீர்ப்பில், நாடு கடத்தப்பட்டால் நிரவ் மோடிக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற எவ்வித ஆதாரமும் கிடையாது.இந்திய அரசு , மோடி இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டால் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார். அங்கு அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. இதனால் நிரவ் மோடியை  இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை  என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

56 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

1 hour ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

5 hours ago