நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்ட குற்றவாளி தாய் .!

Published by
murugan
  • நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும்  வரும்  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.
  • தீர்ப்பு வழங்குவதற்கு முன் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் தாய் என் மகனுக்கு உயிர்பிச்சை கொடுங்கள் என  நிர்பயா தாயாரிடம்  மடிப்பிச்சை கேட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அதில் ஒருவர் சிறுவன் என்பதால் அந்த சிறுவனை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதியுள்ள 5 பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

சிறையில்இருந்த 4 பேரும் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் உச்சநீதிமன்றம் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. இந்நிலையில்  குற்றவாளிகள் 4 பேருக்கும்  வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் தாய் என் மகனை எனக்கு திருப்பி கொடுங்கள்,என் மகனுக்கு உயிர்பிச்சை கொடுங்கள் நிர்பயா தாயாரிடம் சேலையை பிடித்து மடிப்பிச்சை கேட்டுள்ளார்.

ஆனால் ஆஷா தேவி என் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதிக்காக  கடந்த 7 ஆண்டுகளாக காத்து இருந்ததாக கூறினார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

9 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

9 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

11 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

12 hours ago