கடந்த 100 ஆண்டுகளில் யாரும் பார்த்திராத பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன்

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, தொழில்துறையினர் தங்கள் யோசனைகளை தனக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் அதன்மூலம் முன்பு இல்லாத பட்ஜெட்டை தயாரிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியா கண்டிராத பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தொழில்துறையினர் யோசனைகள் இல்லாமல் இது சாத்தியமில்லை. அவர்களது விருப்பம் இல்லாமல் பட்ஜெட்டை என்னால் தயாரிக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும், பெரும்தொற்றல் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம். நமது நாட்டு மக்கள்தொகை, பொருளாதாரத்தை கட்டமைப்பு ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, சர்வதேச பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago