Categories: இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம்.!

Published by
Muthu Kumar

இன்று தொடங்கிய எட்டாவது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி, தலைமை தாங்கினார்.

நாட்டின் எட்டாவது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தலைமையில் தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிரமலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் பல முதல்வர்கள், முக்கிய உறுப்பினர்கள் கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.

நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான இந்த கவுன்சிலில் அனைத்து முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் இதில் அடங்குவர், மற்றும் இதன் தலைவர் பிரதமர் மோடி ஆவார். ஆனால், முதல்வர்களான நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், சந்திரசேகர் ராவ், அசோக் கெலாட், பினராயி விஜயன் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள்  கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன்(Theme): “விக்சித் பாரத் @2047: இந்திய அணியின் பங்கு” கருப்பொருளுடன் இன்றைய நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.

(i)விக்சித் பாரத்@2047, (ii)MSMEகள்(சிறுகுறு தொழில்கள்), (iii)உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், (iv)குறைகளை தீர்த்தல், (v)பெண்களுக்கான அதிகாரம், (vi)சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (vii)திறன் மேம்பாடு, மற்றும் (viii) பகுதி மேம்பாடு மற்றும் சமூக உள்கட்டமைப்புக்கான கதி சக்தி உள்ளிட்ட எட்டு முக்கிய  விவகாரங்கள் குறித்து இன்று நாள் முழுவதும் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட  இருக்கிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

4 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago