ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை – ஹரியானா அரசு!

Published by
Rebekal

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாநிலத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் அதிக அளவில் பரவ தொடங்கியது. இந்த இரண்டாம் அலையின் பொழுது நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டது.

இந்நிலையில், சட்டசபையில் வைத்து மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் பதிவாகவில்லையா என காங்கிரஸ்  எம்எல்ஏ அஃதாப் அகமது அவர்கள் கேள்வி எழுப்பியதுடன் அக்டோபர் 24, 2020 முதல் ஜூலை 31, 2021 ஹரியானாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ஹரியானா மாநில அரசு இதுவரை கொரோனா தொற்று நோயின் பொழுது ஹரியானாவில் ஆக்சிஜன்  பற்றாக்குறையால் உயிர் இழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை  ஹரியானா மாநில அரசு மறைப்பதாக காங்கிரஸ் தலைவர் அகமது குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

39 minutes ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

1 hour ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

2 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

2 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

3 hours ago