ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை – ஹரியானா அரசு!

Published by
Rebekal

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாநிலத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் அதிக அளவில் பரவ தொடங்கியது. இந்த இரண்டாம் அலையின் பொழுது நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டது.

இந்நிலையில், சட்டசபையில் வைத்து மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் பதிவாகவில்லையா என காங்கிரஸ்  எம்எல்ஏ அஃதாப் அகமது அவர்கள் கேள்வி எழுப்பியதுடன் அக்டோபர் 24, 2020 முதல் ஜூலை 31, 2021 ஹரியானாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ஹரியானா மாநில அரசு இதுவரை கொரோனா தொற்று நோயின் பொழுது ஹரியானாவில் ஆக்சிஜன்  பற்றாக்குறையால் உயிர் இழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை  ஹரியானா மாநில அரசு மறைப்பதாக காங்கிரஸ் தலைவர் அகமது குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago