கேரளாவில் இன்று 2வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேரளாவில் இன்று 2வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இங்கு தற்போது 34 பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதனிடையே கேரளாவில் இதுவரை மொத்தம் 499 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 61 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் அங்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 462 ஆக உள்ளது. தற்போது கொரோனா வார்டில் 34 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கேரளாவில்தான் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது கொரோனா பரவல் குறைத்திருக்கிறது. இதனால் கேரளாவில் சில பகுதிகளுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகி அங்கு இயல்பு நிலையும் திரும்பிள்ளது. இதனிடையே நாடு முழுவதும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,836 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 1,389 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 11,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…