டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறைந்து கொண்டே தான் வருகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வந்தது.
டெல்லி அரசு மேற்கொண்ட தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக, தற்போது டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் உயிர் இழப்புகள் எதுவும் டெல்லியில் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 393 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…