No Honking Day [Image source : Inshorts]
மும்பையில் தேவையில்லாத ஹார்ன் சத்தத்தை குறைக்கும் வகையில் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் ‘நோ ஹான்கிங் டே’ கடைபிடிக்கப்படும் என மும்பை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிவித்த மும்பை காவல்துறை, தேவையில்லாமல் சத்தமிடுவதால் சுற்றுச்சூழலில் ஒலி மாசு ஏற்படுவதோடு, மனித ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் ஒலி எழுப்புவதைத் தடுக்கும் வகையில், ‘நோ ஹான்கிங் டே’ கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி, வாகனங்களின் ஹார்ன்கள் மற்றும் சைலன்சர்கள் சரியாக உள்ளதா என்பதை வாகன ஓட்டிகள் உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படைகள் மற்றும் பிற வாகனங்களைத் தவிர, மும்பை நகரத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர்கள் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 16 தேதிகளில் தங்கள் வாகனத்தின் ஹார்ன்களை ஒலிக்க வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேவையில்லாமல் சத்தமிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களின் சைலன்சர்கள் அல்லது எக்ஸாஸ்ட் பைப்புகளை மாற்றியமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் அறிவித்துள்ளனர்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…