இனி அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனு இல்லை..! சன்னி வக்பு வாரியம்..!

Published by
murugan

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்தது.
மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட அவர்கள் கேட்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் ,உத்தரப்பிரதேச மாநில அரசும் ஒதுக்கி தர வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஏராளமானோர் வரவேற்றனர்.
அரசுகொடுக்கும் 5 ஏக்கர் நிலத்தை சிலர் ஏற்கக் கூடாது எனவும், சிலர் ஏற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம் என சன்னி மத்திய வக்பு வாரியத் தலைவர் ஜாபர் ஃபரூக்கி கூறினார்.
மேலும் வக்பு வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 26-ம் தேதி (அதாவது நேற்று ) நடைபெறவுள்ளது.அப்போது இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.அதன்படி நேற்று சன்னி மத்திய வக்பு வாரிய கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்ற  தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டாம் என பல உறுப்பினர்கள் கூறியதால் சீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை  என முடிவுஎடுக்கப்பட்டதாக கூறினார்.
கடந்த 17-ம் தேதி நடைபெற்ற முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் கூட்டத்தில்  உச்ச நிதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Published by
murugan

Recent Posts

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

32 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

52 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

1 hour ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

1 hour ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

2 hours ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

2 hours ago