தனி நபராக வாகனம் ஓட்டினால் முக கவசம் தேவையில்லை – பெங்களூர் மாநகராட்சி!

Published by
Rebekal

பெங்களூரில் தனி நபராக வாகனம் ஓட்டுபவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்களும் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது.

அதே சமயம் முக கவசம் அணியாவிட்டால் அபராதமும் வசூலிக்க பட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிவதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என,  மாநகராட்சி சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஒருவர் மட்டும் சென்றால் இனிமேல் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும், முக கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்லலாம் எனவும், அதே சமயம் இரு சக்கர வாகனத்தில் பின்னால் யாரேனும் அமர்ந்திருந்து இருவராக பயணித்தால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அது போல கார் டிரைவருடன் வேறு பயணிகள் இருந்தால் அவர்களும் நிச்சயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

1 hour ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

2 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

3 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

3 hours ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

4 hours ago

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

4 hours ago